கொரோனா தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படலாம் – எம்.கே.சிவாஜிலிங்கம்

sivajilingam NPC
sivajilingam NPC

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்துவதால் பாரிய பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனியார் பிரிவினருக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கையினை துரிதப்படுத்த வேண்டும் எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.