பாடசாலை சப்பாத்து பவுச்சருக்குரிய கொடுப்பனவுகள் அரசாங்கத்தால் வழங்கப்படாமையால் வர்த்தகர்கள் பாதிப்பு!

boys school shoes 500x500 1
boys school shoes 500x500 1

அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சப்பாத்து பவுச்சருக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் சப்பாத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு சப்பாத்து பவுச்சர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறித்த பவுச்சர்களை வர்த்தக நிலையங்களில் கொடுத்து அவர்கள் சப்பாத்தினை கொள்வனவு செய்ய முடியும். வர்த்தகர்கள் குறித்த பவுச்சர்களை வங்கியில் வைப்பு செய்து பணத்தினைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு இம்முறையும் சப்பாத்து பவுச்சர்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் வர்த்தக நிலையங்களில் சப்பாத்தினைப் பெற்றுக் கொண்டுள்ள போதும், குறித்த பவுச்சர்களுக்குரிய பணம் வர்த்தகர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். சப்பாத்து பவுச்சர்களை வங்கியில் வைப்பு செய்த போதும் அதற்குரிய பணம் இன்னும் கிடைக்கவில்லை என வங்கிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தாக்கம் காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு சப்பாத்துகளைப் வழங்குவதற்காக கடன் பெற்று பெருமளவிலான சப்பாத்துக்களை இறக்குமதி செய்து வழங்கியுள்ள போதும் அதற்கான பணம் இரண்டு மாதங்களாக வழங்கப்படாமையால் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.