சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தூபியில் அஞ்சலி!

IMG 1672
IMG 1672

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஏப்பிரல் 21 உயிர்த ஞாயிறு குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் இன்று புதன்கிழமை (21) மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மட்டு மாநகரசபை ஆணையாளர் மற்றும் உறுப்பினர்கள்  சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

IMG 1666


மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இன்று காலை 7 மணிக்கு மாநகரசபை ஆணையாளர் தயாபரன் மற்றும் மாநகரசபை மாநகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

IMG 1677


குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுதாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 70 மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் இந்த குண்டுதாக்குதல் இடம்பெற்று இன்று இரண்டும் ஆண்டு நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.ி