நேற்றைய தினம் இலங்கையில் 367 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களின் எண்ணிக்கை 94 ஆகும்.
இவ்வாறு, கம்பஹா மாவட்டத்திலிருந்து 54 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 43 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 41 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 22 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்திலிருந்து 21 பேரும் நேற்றையதினம் தொற்றுக்குள்ளானவர்களாக பதிவாகியுள்ளனர்.
இதேபோன்று, அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 13 பேரும், பதுளை மாவட்டத்திலிருந்து 11 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 8 பேரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 7 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து ஆறு பேரும், காலி மாவட்டத்தில் இருந்து ஐந்து பேரும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர்.