புத்தாண்டின் பின்னர், கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பிரதானி விஷேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமையே அதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.