மட்டக்களப்பில் இரத்ததான முகாம்

IMG 0080 750x375 1
IMG 0080 750x375 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது இரத்தம் சிந்திய உறவுகளின் நினைவாக ‘எங்கள் உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்துகின்றோம்’ என்னும் தொனிப்பொருளிலாளன இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி பெடினன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் அனுசரணையுடன் இந்த இரத்ததமான முகாம் நடாத்தப்பட்டது.

இந்த இரத்ததானமுகாம் ஆரம்ப நிகழ்வில் ஏப்ரல் 21தாக்குதலில் உயிர்நீர்த்த உறவுகளின் நினைவாக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கிவைத்தனர்.