தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட சந்திப்பு இன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதுவரையும் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்த சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையிலான உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளனர் என்ற தகவல் வெகுவாக பரவியது .
இதன் காரணமாக ரெலோ கட்சிக்குள் பெரும் குழப்பமும் ஏற்பட்டது .இந்த நிலையில் கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது .
தற்போது செல்வம் அடைக்கலநாதன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்துக்குள்ளும் நுழைந்து விட் டார் என்று இன்னொரு தகவலும் தற்போது பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது .