பொதுச்சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களில் மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடிவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இன்று காலை கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இராஜாங்க அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அநேக நிறுவனங்களின் தலைவர்கள் உரிய முறையில் கடமையாற்றாமை தொடர்பாக அறியக் கிடைத்துள்ளதோடு அரசு எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியாதுள்ளமையால் அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி அக்கூட்டத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.