வவுனியா ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை கடுகதி புகையிரம் இன்று காலை மோதியதில் அனைத்து மாடுகளும் பலியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமே ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியது.
இதன் காரணமாக பல இலட்சம் பெறுமதியான 16 எருமை மாடுகள் குறித்த இடத்திலேயே பலியாகியுள்ளது.