மறைந்த நடிகரும் சமூக பற்றாளருமான விவேக்கின் நினைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளை அகில இலங்கை தமிழ் இளைஞர் பேரவை முன் எடுத்துள்ளது.
அதன் முதற்கட்டமாக பாடசாலைகள்,தனியார்கல்வி நிலையங்கள்,இளைஞர் தொழிற்பயிற்சி மையங்கள்,காவற்துறை நிலையம் என பொது இடங்களில் இருநூறுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் மீதமுள்ள மரகன்றுகள் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடுகை செய்யப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.