ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை

rajitha
rajitha

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதி எதிர்வரும் யூன் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.

முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமையால், அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்றைய தினம், விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.