கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 99,691 ஆக அதிகரிப்பு!

coronavirus.positive.1 768x384 1
coronavirus.positive.1 768x384 1

நாட்டில் நேற்றைய தினம் 969 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

பேலியகொடை கொவிட்-19 கொத்தணியுடன் தொடர்புடைய 931 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 38 பேருக்கும் நேற்று கொவிட் -19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 99,691 ஆக உயர்வடைந்துள்ளது.

இதையடுத்து, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 5,021 ஆக அதிகரித்துள்ளது.