குருநாகல் மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

coronabusiness 1588833381344 2
coronabusiness 1588833381344 2

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 969 பேரில் 251 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 236 பேர் , கொழும்பு மாவட்டத்தில் 194 பேர், களுத்துறை மாவட்டத்தில் 48 பேர், காலி மாவட்டத்தில் 36 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 28 பேர், மாத்தறை மாவட்டத்தில் 26 பேர் , அனுராதபுரம் மாவட்டத்தில் 23 பேர், மாத்தளை மாவட்டத்தில் 21 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 12 பேர், கண்டி மாவட்டத்தில் 11 பேர் , மொனராகலை மாவட்டத்தில் 10 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 09 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 08 பேர், புத்தளம் மாவட்டத்தில் 07 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 03 பேர், அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.