பெரியகட்டு அந்தோனியார் கோவில் வீதி அமைக்கும் பணி ஆரம்பம்

DSC01800
DSC01800

வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு அந்தோனியார் ஆலயத்தின் வீதி புனரமைப்பு பணிகளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஆரம்பித்து வைத்திருந்தார்.

மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் ஆண்டகை முன்னிலையில் குறித்த பணிகளை ஆரம்பித்து வைத்ததுடன் சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தினை 189 மில்லியன் ரூபா பெறுமதியில் மேற்கொள்ளவுள்ளனர்.

பெரியகட்டு அந்தோனியார் ஆலயத்தினை சூழ வீதி அமைக்கப்படவுள்ளதுடன் அந்தோனியார் ஆலயத்தினூடாக பெரியகட்டு கிராமம் வரையான பிரதான வீதியும் இதன்போது அமைக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் ஆண்டகை அந்தோனியார் ஆலயத்தின் பங்கு தந்தை அருள்நேசன், செட்டிகுளம் பிரதேசசபை தலைவர் ஜெகதீஸ்வரன், கிராம சேவகர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.