இன்றிரவு பல பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

download 3 12
download 3 12

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழைபெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும்.

அத்துடன் மின்னல் தாக்கத்தில் இருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.