நேற்றைய தினம் வீதி விபத்தினால் மேலும் எட்டுப் பேர் பலி!

download 1 24
download 1 24

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் வீதி விபத்துக்களினால் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஆறு பேர் நேற்று சனிக்கிழமை நடந்த விபத்துக்களில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவர் அதற்கு முன்னர் நடந்த விபத்துக்கிளில் சிக்கியவர்கள் காயமடைந்தவர்கள் என பிரதிப் காவல்துறைமா அதிபரும், காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஐவர், பாதசாரியொருவர், முச்சக்கர வண்டி பயணியொருவர் மற்றும் லொறியொன்றின் உதவியாளர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.