ஓமந்தையில் குருதிக்கொடை நிகழ்வு!

a35e7ce6 20e7 43bc b738 8de754c6f0a0
a35e7ce6 20e7 43bc b738 8de754c6f0a0

குருதிகொடையின் இரண்டாம் அலை பாக்கியம் அறக்கட்டளை மற்றும் சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் ஓமந்தை மத்தியகல்லூரியில் இன்று நடைபெற்றது.

இதன்போது ஏராளமான இளையோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு குருதி தானம் வழங்கி வைத்தனர்.

குருதி கொடையளித்தவர்களுக்கு ” உயிர்நேய மாண்பாளர் ” எனும் சான்றிதழும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பாக்கியம் அறக்கட்டளை அமைப்பினர் மற்றும் சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.