வட மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

112568612 gettyimages 1214909868 1
112568612 gettyimages 1214909868 1

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 408 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் கேகாலை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித்தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.