நுவரெலியா மாநகர சபை பணியாளர்களுக்கான புதுவருட கொண்டாட்ட நிகழ்வொன்று நேற்று (25) கிரிகெரி வாவிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மாநகர முதல்வர் சந்தன லால் கருணாதிலக்கவின் ஏற்பாட்டில் மாநகரசபையின் பணியாளர்கள் பலரின் பங்குபற்றலுடன் இந்த களியாட்டங்களில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கொரோனா பரவல் நிலைமை அதிகரித்துவரும் பின்னணியில், புதிய சுகாதார வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலைமையில், மேற்படி நிகழ்வில் பங்குபற்றியவர்களில் பெரும்பாலானோர் உரிய வகையில் முகக்கவசங்களை அணியாமலும் சமூகஇடைவெளியை கடைபிடிக்காமலும் களியாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் நுவரெலியா பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன், கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.