பூஸா சிறைச்சாலைக்கு 30 சிறைக்கைதிகள் மாற்றம்!

Bossa
Bossa

நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் 30 உறுப்பினர்கள் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பூஸா சிறைச்சாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 சிறைக்கூடங்களில் அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.