யானை தாக்கி வயோதிபர் பலி

dethbody
dethbody

திருகோணமலை சேருநுவர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்கி வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சேருநுவர-ஆர்.பீ.04 பகுதியைச் சேர்ந்த பி.எச்.டி.சுவேற்றி சவரிமுத்து (77 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற வேளையிலேயே யானை தாக்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்