சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய இருவர் கைது

DSC 0167
DSC 0167

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் அனுமதி இன்றி கடத்தி செல்லபட்ட 10 மாடுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (28) அதிகாலை 3 மணியளவில் புளியங்குளம் பகுதியில் வாகனம் ஒன்றில் மாடுகள் கடத்திச்செல்லப்பட்ட நிலையில் சிதம்பரபுரம் பகுதியில் அதனை வழிமறித்த காவல்துறையினர் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதி இல்லாமல் மாடுகள் கடத்திச்செல்லப்பட்டுள்ளமை தெரியவந்தது.

வாகனத்தில் இருந்தவர்களை கைதுசெய்த சிதம்பரபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளிற்காக இருவரையும் வவுனியா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 10 மாடுகள் காவல்துறையினரால் கைப்பற்றபட்டது. அவற்றை கடத்தி செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட சிறிய கப்ரக வாகனம் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.