ராஜித சேனாரத்னவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

Rajitha Senaratne
Rajitha Senaratne

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை யூலை மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் கடந்தல் சம்பந்தமாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி, அதன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்திய காரணத்திற்காக இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.