வவுனியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று

depositphotos 343962690 stock photo illustration corona virus microbe infection 1
depositphotos 343962690 stock photo illustration corona virus microbe infection 1

வவுனியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று நேற்றிரவு (28) உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் சில இரவு வெளியாகிய நிலையில் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாமடு பகுதியில் இருவருக்கும், சாளம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கையினையும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.