சிரேஷ்ட ஊடகவியலாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஜனாதிபதி ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் தனது நியமக்கடிதத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.