காலி சிறைச்சாலையில் மதிலுக்கு மேல் தொலைபேசிகள் , போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன் எறியப்பட்ட பொதியொன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பொதிக்குள்ளிருந்து இரு தொலைபேசிகள் , 200 போதை வில்லைகள் அடங்கிய இரு பக்கற்றுகள், ஹெரோயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் இரு பக்கற்றுகள் மற்றும் 10 புகையிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பொதி தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , காலி காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.