இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1500 கிலோகிராம் புகையிலை காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு கடற்கரை பிரதேசத்தில் இந்த புகையிலை தொகையுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட புகையிலையின் பெறுமதி சுமார் 12,600,000 ரூபாயென காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட புகையிலை போன்றன மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.