மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

received 1357529097975498
received 1357529097975498

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுவருகிறது

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் வெளி மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

இந்த கலந்துரையாடலில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இராணுவத்தின் காவல்துறையினர் மீன்பிடி அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்