பரிசோதனை முடிவுகள் வெளிவருவதில் தாமதம் அதிகமான தொற்றாளர்கள் இருக்கலாம் – உபுல் ரோஹண

pg1 5
pg1 5

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான ஆய்வக அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் நிலவுகின்றது என இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளே தற்போது வெளியிடப்படுகின்றது என இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் கொரோனா பரவல் குறித்த உண்மையான நிலைவரத்தை அறிந்துகொள்ள முடியாதுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆய்வக அறிக்கைகளை வெளியிடுவதை விரைவுபடுத்துவது முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது வெளியிடப்படும் தினசரி கொரோனாத் தொற்று எண்ணிக்கைகளை விட நாட்டில் அதிகமான தொற்றாளர்கள் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமையைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், பொது இடங்களில் மக்கள் நீண்ட நேரம் தரித்து நிற்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.