நாட்டின் தற்போதைய நிலையில் முக்கிய விடயங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் விசேட பூஜை வழிபாடுகள் ரம்பொடை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.