தண்ணிமுறிப்பு பகுதியில் ஆங்காங்கே காணப்படும் வெடிபொருட்கள்: அச்சத்தில் மக்கள்!

IMG 20210501 WA0071
IMG 20210501 WA0071

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவற்துறை பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள இலிங்கேஸ்வரன் என்பவருடைய வயல்  காணியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

குறித்த வயல் காணிக்குள் கைக்குண்டு இருப்பதை அவதானித்த குறித்த காணி உரிமையாளரால் முள்ளியவளை காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை காவற்துறையினர் குறித்த கைக்குண்டை சென்று பார்வையிட்டுள்ளதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று தகர்த்தளிப்பதாக தெரிவித்திருக்கின்றனர்

இந்நிலையில் குறித்த நபரின் காணியில் இருந்த குண்டை பார்வையிட சென்ற வேளை   இன்னுமொரு  குண்டும் இருப்பது காவற்துறையினரால் இன்று இனம்காணப்பட்டுள்ளது

மக்கள் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறி மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது வெடிபொருட்கள் அகற்றியதாக தெரிவிக்கப்பட்ட குறித்த பகுதிகளில்  தொடர்ச்சியாக இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அண்மையில் குறித்த தண்ணிமுறிப்பு பகுதியில் 10 ஆர் பி ஜி குண்டுகள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது