காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது

kaithu
kaithu

நில்வெல்ல பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பை முன்னெடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நில்வெல்ல – பட்டுவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, திக்வெல்ல காவல்துறையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது சந்தேகநபர் ஒருவர், 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எனினும், இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த சந்தேகநபரின் மனைவி உள்ளிட்ட தரப்பினர் அமைதியின்மையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, காவல்துறையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சிலரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் காவல்துறை முன்னெடுத்துள்ளது.

சந்தேகநபர்கள், தற்போது குறித்த பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திகன – கும்புக்கந்துர பிரதேசத்தில் போதைப்பொருளை கொண்டுசென்ற சிற்றூர்ந்தை பரிசோதனைசெய்ய முற்பட்டபோது, காவல்துறை அதிகாரிகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கல்வீச்சுச் தாக்குதல்களை நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.