வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவுக்கு வீசப்பட்ட 6 தொலைபேசிகள் மீட்பு!

VELIKKADAI
VELIKKADAI

வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவு அறைக்கு வீசப்பட்ட பொதி ஒன்றிலிருந்து கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வனாத்தமுல்ல பகுதியிலிருந்து மகளிர் பிரிவின் கூரைக்கு மேலாக பொதி ஒன்று வீசப்பட்டுள்ளது.

அந்த பொதியலிருந்து 6 கையடக்க தொலைபேசிகள், 8 மின்கலங்கள், 5 மின்னேற்றி, 4 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.