மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில் சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை சிறப்பு மனநல வைத்திய குழு முன்பாக சோதனைக்குட்படுத்துவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.