இலங்கையில் நேற்று (02) ஆயிரத்து 891 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் 7 தொடக்கம் 8 சதவீதமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 764 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். இதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது