சேதனப் பசளை பயன்பாட்டை விரிவுபடுத்தி இரசாயனப் பயன்பாட்டை முழுமையாகத் தடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கும் தீர்மானம் இந்த நூற்றாண்டில் அரச தலைவர் ஒருவர் மேற்கொண்ட உன்னதமான தீர்மானம் என வடக்கு, வடமத்திய மாகணாங்களுக்கான பிரதான சங்கநாயக்கரும் அனுராதபுர ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாராதிபதியுமான சங்கைக்குரிய நுகேதென்ன பஞ்சானந்த தேரர் தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.