கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

realistic coronavirus background 52683 35109
realistic coronavirus background 52683 35109

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 1,891 பேரில் 387 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 1891 பேரில் 1014 பேர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 111,753 ஆகவும் அதிகரித்துள்ளது .