வவுனியா புதுக்குளம் பகுதியில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு

IMG 20210503 145215
IMG 20210503 145215

வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியை சேர்ந்த 100 பேருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டது

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் குருக்கள் புதுக்குளம் பகுதியில் கடந்த இருதினங்களிற்கு முன்பாக இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கிராமத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இருவருடனும் தொடர்புகளை பேணிய 100 பேருக்கு இன்றையதினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன்,கிராமத்தில் தொற்றுநீக்கல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.