காவல்துறையினர் என கூறி நகை கொள்ளை!

201909122218034752 rs 3 lakhs worth jewellery and money robbery in kottakuppam SECVPF
201909122218034752 rs 3 lakhs worth jewellery and money robbery in kottakuppam SECVPF

வவுனியாவின் இருவேறு பகுதிகளில் காவல்துறையினர் என தெரிவித்து 30பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது .

இன்றையதினம், வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை காவல்துறையினர் என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு இருவீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.