நாட்டில் நேற்று (04) கொவிட்-19 தொற்றுறுதியான 1,914 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 542 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 113 பேர் தொம்பே பகுதியிலும் 101 பேர் கிரிந்திவெல பகுதியிலும் 80 பேர் பூகொட பகுதியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.