மக்களுக்கு ஆபத்தான கற்குவாரிகள் நிறுத்தப்படும்:புதிய தவிசாளர்

IMG20210505113807
IMG20210505113807

எமது சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆபத்தான கற்குவாரிகளின் அனுமதிப்பத்திரங்களை மீளப்பெறுவதற்கான பரிசீலனைகளை செய்வேன் என்று தெற்கு பிரதேச சபைக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தவிசாளர் த. யோகராயா தெரிவித்தார்.


தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
போட்டியின்றி தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது. எனது பதவிக்காலம் குறுகிய காலமாகவிருந்தாலும் இந்த காலத்தில் செய்யப்பட வேண்டியவற்றை செய்வேன். முக்கியமாக இன்று வீதிகட்டமைப்புகளை பார்த்தால் சில வீதிகள் மோட்டார் இயந்திரங்களையே காணாமல் இருக்கின்றது. அப்படியான வீதிகளை சீரமைப்பதும் ஒளி ஊட்டுவதுமே எனது பிரதான இலக்காக இருக்கும்.அத்துடன் ஏனைய கட்சிகளை சார்ந்த அனைத்து உறுப்பினர்களிற்கும் சமமான வேலைத்திட்டங்களை வழங்குவேன்.

அத்துடன் பிரச்சனைக்குரிய கற்குவாரிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆபத்தான கல்குவாரிகளின் அனுமதிபத்திரங்களை மீளப்பெறுவதற்கான பரிசீலனைகளை செய்வேன். முன்னாள் தவிசாளர் தன்னால் முடிந்தளவிலான செயற்பாடுகளை செய்துள்ளார். அவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்