காவற்துறையினர் எனக்கூறிநகை கொள்ளை:மூவர் கைது!

kaithu

வவுனியாவில் கடந்தவாரம் காவற்துறையினர் என தெரிவித்து 30பவுண் நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் வவுனியா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வவுனியா நகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை காவற்துறையினர் என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனைசெய்வது போல பாசாங்கு செய்துவிட்டு இருவீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். 

இது தொடர்பாக வவுனியா காவற்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை வவுனியா காவற்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற காவற்துறை உத்தியோகத்தர் என்று கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது