தனியார் வங்கி ஒன்றின் ஏ டி எம் இற்கு வைப்பு செய்வதற்காக எடுத்துவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சி!

robbery 2
robbery 2

இன்று காலை 6.45 மணி அளவில் அனுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ டி எம் இற்கு வைப்பு செய்வதற்காக எடுத்துவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சி செய்யப்பட்டிருந்தது.

மோட்டா சைக்கிளில் வந்த இருவர் வங்கி அதிகாரிகள் மீது மிளகாய் தூள் வீசி பணத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.

இதன்போது வங்கி அதிகாரிகளிடம் 4 கோடி ரூபா பணம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பணத்தை கொள்ளையிட முயன்ற போது அதிகாரிகளுடன் போராடிய சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதை அடுத்து கொள்ளைகாரர்கள் பணத்தை கொள்ளையிடாமல் தப்பி ஓடியுள்ளனர்.