வவுனியா அராபாத்நகர் பகுதியில் இன்று (06) வீசிய பலத்த காற்றினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பப்பாசி செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றையதினம் காற்றுடன் கூடிய மழை பொழிந்துள்ளது.
குறிப்பாக வவுனியா அரபாத்நகர் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த ஒரு ஏக்கர் அளவிலான பப்பாசி செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலட்ச ரூபாய் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.