ஹெரோயின் போதைப் பொருளுடன் தந்தை மற்றும் மகன் கைது!

IMG 20210506 WA0004 1
IMG 20210506 WA0004 1

இன்று கல்முனை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கிரீன் ஃபீல்ட் தொடர்மாடியில் மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 17.80g அளவிலான ஹெரோயின் போதைப் பொருளை கல்முனை காவல்துறையினர் கைப்பற்றினர்.

கல்முனை காவல் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் கட்டளையின்படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் அருணன் உள்ளிட்ட காவல்துறையினர் ஒன்றாக இணைந்து சுற்றி வளைத்து தந்தை மற்றும் மகன் இருவரையும் கைது செய்து செய்துள்ளனர்.

நாளை அவர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளளனர். இவ்வாறான போதைப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அவற்றை வாங்கி உபயோகிப்பவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதும் கிடைக்கப் பெற்றால் கல்முனை காவல் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.