பைஸர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி

Pfizer Vaccine 700x375 1
Pfizer Vaccine 700x375 1

இலங்கையில் அவசர தேவைக்காக ´பைஸர்´ தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனை குழுவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

இதற்கமைய, 5 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் கடுமையான நெருக்கடி நிலவுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.