இளைஞரை துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

kaithu
kaithu

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை துன்புறுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை துன்புறுத்தி அவரை நிர்வாணமாக்கி காணொளியை பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்
ஆச்சிபுரம் பகுதியினை இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.