நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ள மேலும் சில பகுதிகள்!

lockdown
lockdown

மேலும் சில பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில்,

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட நிவன்திடிய மற்றும் மம்பே கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள்.

கொழும்பு மாவட்டத்தின் மஹரகம காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட அரவ்வல மேற்கு கிராம சேவகர் பிரிவு.

காலி மாவட்டத்தின் ஹபராதுவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கொக்கல 1, கொக்கல 2, மீகஹகொட, மலியகொட மற்றும் பியதிகம மேற்கு கிராம சேவகர் பிரிவுகள்.

மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.