வாழையில் உணவுகளை வழங்குவதற்கு முயற்சி பிரதேச சபை உறுப்பினர்!

68651309 2499123083499900 9194565257408806912 n
68651309 2499123083499900 9194565257408806912 n

தற்சார்பு பொருளாதாரத்தினை கருத்தில்கொண்டு  உணவகங்களில் வாழையில் உணவு வழங்கலை ஊக்குவிக்கவுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் துஸ்யந்தன் விக்டர்ராஜ் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா உணவகங்களில் வாழை இலையில் உணவு வழங்கும் முறையை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பில் அனைவரது கருத்துக்களின் பின்னர் உரிய சபைகள், மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து முயற்சி எடுப்பதற்கு எண்ணியுள்ளேன். 

 
இதன்மூலம்  உள்ளூர் விவசாயிகளின் தற்சார்பு பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய ஒரு திட்டமாகவும் அமையும். இதேவேளை  ஒருவர் உணவு உட்கொண்ட தட்டில் இன்னொருவர் உணவு உட்கொள்ளும் நிலையும் மாறும். சில வேளைகளில் நோய்த்தொற்றும் இதன் மூலம் இன்னொருவருக்கு பரவாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. 
ஒருவாழை இலையின் விலை 5ரூபாயாக இருந்தாலும்உணவு கட்டணத்தில் மேலதிகமாக பெற்றுக் கொள்வதில் பெரிய ஒரு தவறு ஏதும் கிடையாது. 

இதன் சாதக , பாதக தன்மையை கருத்தில் கொண்டு எதிர்வரும் சபை அமர்வுகளில் இதுதொடர்பான ஒரு பிரேரணை முன்வைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்