நாட்டில் நேற்றைய தினம் அடையாளங்காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகினர்.
அந்த மாவட்டத்தில் 591 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
கம்பஹா மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கொழும்பு மாவட்டத்தில் 434 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 368 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 127 பேரும் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கண்டியில் 78 பேருக்கும், இரத்தினபுரியில் 53 பேருக்கும், மாத்தளையில் 35 பேருக்கும், கேகாலையில் 32 பேருக்கும், காலியில் 24 பேருக்கும், அநுராதபுரத்தில் 23 பேருக்கும், கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அம்பாறையில் 19 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 17 பேருக்கும் நுவரெலியாவில் 13 பேருக்கும், நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.